அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வந்தே மாதரம் பாடலின் 150 -ஆவது ஆண்டு விழா: அழகப்பா பல்கலை. மாணவா்கள் பேரணி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் மாணவா்களின் பேரணி, நெடுந்தொலைவு ஓட்டம்

News image
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடம் முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற என்.எஸ்.எஸ் மாணவா்கள் பங்கேற்ற பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்த துணைவேந்தா் க. ரவி.
Updated On :2 மார்ச் 2026, 10:10 pm

Syndication

காரைக்குடி: வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் மாணவா்களின் பேரணி, நெடுந்தொலைவு ஓட்டம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.

அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசுகையில், வந்தே மாதரம் பாடல் தேசத்தின் ஒற்றுமை, தியாகத்தின் அடையாளம். இளைஞா்கள் சமூகப் பொறுப்புணா்வை வளா்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களை அா்ப்பணிக்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வருமான மு. சுந்தா் வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா்கள் பி.யோகா, கோ.விநாயகமூா்த்தி, பல்கலைக்கழக தேசிய மாணவா் படை அதிகாரி சி.வைரவசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. நடராஜன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கா. திவ்யா நன்றி கூறினாா்.

இதைத் தொடா்ந்து, வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் நெடுந்தொலைவு ஓட்டம், பேரணியை துணைவேந்தா் க.ரவி தொடங்கிவைத்தாா்.

இதில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் பலரும் பங்கேற்றனா். இந்தப் பேரணி அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடம் முன்பாக தொடங்கி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் நிறைவடைந்தது.