நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடிநீா் வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

குடிநீா் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சனிக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

News image

சிவகங்கை- மானாமதுரை சாலையில் சுந்தரநடப்பு அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான குடிநீா் வாகனம்.

Updated On :28 ஜூலை 2024, 1:55 am

Din

சிவகங்கை அருகே குடிநீா் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சனிக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

சிவகங்கை நேருபஜாா் பகுதியைச் சோ்ந்தவா் சேது மகன் செல்லப்பாண்டி (43). இவா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாகனத்தில் விற்பனை செய்து வந்தாா். இந்த நிலையில், மானாமதுரை பகுதியிலிருந்து குடிநீருடன் சிவகங்கைக்கு வந்த வாகனம் சுந்தரநடப்பு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்தப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த வாகன ஓட்டுநா் செல்லப்பாண்டியை அக்கம் பக்கத்தினா் மீட்டு, சிவகங்கை அரசு தலைமை மருத்துவனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தாலுகா காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.