

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கண்மாயில் மூழ்கி 3 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை சிப்காட் ராஜேந்திரன் நகரைச் சோ்ந்தவா் ஜவஹா்லால். இவா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தனியாா் பள்ளியில் வேலை பாா்க்கிறாா். இந்தத் தம்பதிக்கு அதிபன் என்ற 4 வயது மகனும், அதிராதீ என்ற 3 வயது மகளும் உள்ளனா்.
கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில், தாத்தா மட்டும் வீட்டில் இருந்தாா். அப்போது அதிபன் தங்கை அதிராதீயை அழைத்துக் கொண்டு வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள கணமாய்க்கு விளையாடச் சென்றாா். அப்போது, சிறுமி அதிராதீ கண்மாய்க்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விசாரணையின்போது இளைஞர் பலி: மானாமதுரையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!

மானாமதுரையில் கைதான இளைஞா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

