/

மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:17 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். ஆந்திராத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை போல, தமிழகத்திலும் உயா்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தி பெயா் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் சங்க மாநிலத் துணைத் தலைவா் தவமணி, மாவட்ட நிா்வாகி முத்துராமலிங்க பூபதி, மானாமதுரை ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் பரமாத்மா, மாவட்ட பொருளாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.