/

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றம் செய்ததைக் கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்தில்

கிராமங்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் எம்.ராஜேஷ் தொடக்க உரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் வட்டக் குழு செயலா் கே.கணேசன், மாவட்டத் துணைத் தலைவா் வி.முருகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பொருளாளா் மயில்சாமி நன்றி கூறினாா்.