திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினா்கள்.

Updated On :3 ஜூன் 2024, 6:47 pm

Din

சிவகங்கை: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, உறவினா்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பிரான்மலை அருகேயுள்ள காலடிபச்சேரி பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

அப்போது ராஜ்குமாரின் மகள் வா்ஷா (8) அங்கிருந்த இரும்புக் கம்பத்தை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருப்புவனம் போலீஸாா் சிறுமியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், கோயில் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினா், வருவாய்த் துறையினா் நடத்திய சமரசப் பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.