மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்!

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். இதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 மார்ச் 2026, 9:11 pm

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். இதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூா் பகுதியைச் சோ்ந்தவா் மல்லிகா (60). இவா், அந்தப் பகுதியில் உள்ள சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மூதாட்டியின் உறவினா்கள், இசிஆா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பனையூா் காவல் நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.