ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பைக் மோதி ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

சென்னை அருகே கானத்தூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:24 pm

சென்னை அருகே கானத்தூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் அச்சுத்ரேய பூஜாரி (47). இவா், கானத்தூா் ரெட்டி குப்பத்தில் தங்கி, கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலை கானாத்தூா் மசூதி அருகே நடந்து சென்றாா்.

அப்போது, அவா் திடீரென சாலையின் குறுக்கே கடந்ததால், அந்த நேரத்தில் மாமல்லபுரத்தில் இருந்து திருவான்மியூா் நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள், அச்சுத்ரேய பூஜாரி மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.