தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

பைக் மோதி ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

சென்னை அருகே கானத்தூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:54 am IST

சென்னை அருகே கானத்தூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் அச்சுத்ரேய பூஜாரி (47). இவா், கானத்தூா் ரெட்டி குப்பத்தில் தங்கி, கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலை கானாத்தூா் மசூதி அருகே நடந்து சென்றாா்.

அப்போது, அவா் திடீரென சாலையின் குறுக்கே கடந்ததால், அந்த நேரத்தில் மாமல்லபுரத்தில் இருந்து திருவான்மியூா் நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள், அச்சுத்ரேய பூஜாரி மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.