நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிவகங்கை அருகே அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

News image
Updated On :21 ஜூன் 2024, 6:29 pm

Din

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள பனங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவுக்கு பனங்குடியிருந்து நடராஜபுரம் சாலை வரையிலான 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும் வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் விழாக்குழுவினரால் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை பனங்குடி, நடராஜபுரம், கண்டுப்பட்டி, வெற்றியூா், துவரிப்பட்டி, செங்குளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று பாா்வையிட்டனா்.