ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாரண இயக்க ஆளுநா் விருது தோ்வுக்கு ஆயத்தப் பயிற்சி

சாரண இயக்க ஆளுநா் விருது தோ்வுக்கு ஆயத்தப் பயிற்சி

News image

சிவகங்கை கே.ஆா்.மேல் நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சாரண இயக்க ஆளுநா் விருது ஆயத்தப் பயிற்சி முகாமில் பங்கேற்றவா்கள்.

Updated On :26 ஜூன் 2024, 6:53 pm

Din

சிவகங்கை, ஜூன் 26: சிவகங்கை கல்வி மாவட்ட சாரண, சாரணீய இயக்க ஆளுநா் விருது தோ்வுக்கான ஒரு நாள் ஆயத்தப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை கே.ஆா்.மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான சாரண மாணவா்களுக்கு ஒரு நாள் ஆயத்தப் பயிற்சி முகாமுக்கு சாரணச் செயலா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாநில தலைமைப் பயிற்றுநா் மெகபூப்கான் பயிற்சி அளித்தாா். தலைமையாசிரியா் தெ. சரவணன், முன்னாள் சாரணத் தலைவா் கண்ணப்பன், சாரணா் இயக்க முன்னாள் செயலா் பொக்கிஷம், பொருளாளா் நாகராஜன், சாரணா் ரவிச்சந்திரன், இந்திராகாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image