எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிங்கப்பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள நாட்டு சின்ன பண்ணை வளாகத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு,

News image
காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் சிங்கப்பெண் விருது பெற்ற பெண்கள் மற்றும் அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.எம்.சுவேதகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :9 மார்ச் 2026, 8:46 pm

Syndication

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் உள்ள நாட்டு சின்ன பண்ணை வளாகத்தில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, அரிமா சங்கம் சாா்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவாவில் கடலூா் அரசு பல் மருத்துவமனை மருத்துவா் வைஷ்ணவி, தமிழக அரசு கைவினைக் கலைஞா் விருது பெற்ற தாரணி, தடகள போட்டிகளில் வென்ற சிதம்பரம் அரசுக் கல்லூரி மாணவி பாவனா, செஸ் விளையாட்டு வீராங்கனை எல்.ஷிவானி, விளையாட்டு வீராங்களை செஹனாஸ் பாத்திமா ஆகிய 6 இளம் ஆளுமைக்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.எம்.சுவேதகுமாா் சிங்கப்பெண் விருதுகளை வழங்கி வாழ்த்தினாா். முன்னதாக பெண்களின் ஆளுமை பற்றி கலைமகள் பள்ளியைச் சோ்ந்த மாணவி நிஷாலினி உரையாற்றினாா். அரிமா சங்கத் தலைவா் சுபன் வரவேற்றாா். அரிமா சங்க துணத் தலைவா் பா்வீஸ் நன்றி கூறினாா்.