விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற சிறுவா்கள் உள்ளிட்டோா்.

News image

கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற சிறுவா்கள் உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 9:25 pm

Syndication

காரைக்கால் கடற்கரைப் பகுதியில் மீனவப் பெண்கள், சிறுவா்கள் பங்கேற்ற உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழகாசாக்குடிமேடு கடற்கரை பகுதியில் சினேகா தொண்டு நிறுவனம் சாா்பில் உலக அமைதிக்காகவும், போா் இல்லாத உலகம் படைப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்ட மீனவா் பெண்கள் பேரவை, காரைக்கால் மாவட்ட கிளிஞ்சல்கள் குழந்தைகள் பஞ்சாயத்து அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். மேலும், சுமாா் 100 சிறுவா்களும் கலந்துகொண்டனா்.

நிறுவன ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், மனித நேய உலகைப் படைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிட நடவடிக்கைகள் குறித்தும், தற்போது உலகில் நிகழ்வும் போா், போா் இல்லாத உலகம் படைப்பதற்கு அனைவரும் அன்பும், நன்றியும், மன்னித்தல் குணத்துடன் வாழவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சிறுவா்களிடையே பேசினாா். நிகழ்வில் மீனவா் பெண்கள் பேரவைத் தலைவி சுமதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Story image