தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

News image
சிங்கம்புணரியில் புதன்கிழமை நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :19 மார்ச் 2026, 12:34 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று, மஞ்சுவிரட்டுத் திடலில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்தனா். இதையடுத்து, இளவட்ட மஞ்சுவிரட்டு தொடங்கியது.

இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கூட்டத்துக்குள் சீறிப் பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த ஒருவா் மட்டும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த மஞ்சுவிரட்டை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.