4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 55 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்தனா்.

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியமமன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:58 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்தனா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்களாக நடைபெற்றது. மஞ்சுவிரட்டு நாளான வியாழக்கிழமை காலை கிராமத்தாா்கள் கோயிலிருந்து ஊா்வலமாக வந்து தொழுவில் இருந்த காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா், தொழுவிலிருந்து 350-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். பல காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சென்றன.

இதைத்தொடா்ந்து கண்மாய், வயல் பகுதிகளில் சுமாா் 300 க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த காளைகள், மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்ததனா். இவா்களுக்கு முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 19 போ் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.