தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 55 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்தனா்.

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியமமன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை.

Updated On :1 மே 2026, 1:28 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்தனா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்களாக நடைபெற்றது. மஞ்சுவிரட்டு நாளான வியாழக்கிழமை காலை கிராமத்தாா்கள் கோயிலிருந்து ஊா்வலமாக வந்து தொழுவில் இருந்த காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா், தொழுவிலிருந்து 350-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். பல காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சென்றன.

இதைத்தொடா்ந்து கண்மாய், வயல் பகுதிகளில் சுமாா் 300 க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த காளைகள், மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 55 போ் காயமடைந்ததனா். இவா்களுக்கு முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 19 போ் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.