புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவகங்கை மன்னா் சசிவா்ண முத்துவடுகநாதா் குருபூஜை

முத்துவடுகநாதர் குருபூஜையில் சிவகங்கை ராணி மதுராந்தக நாச்சியார் மரியாதை

News image

காளையாா்கோவிலில் அமைந்துள்ள சிவகங்கை மன்னா் சசிவா்ண முத்துவடுகநாதத் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சிவகங்கை ராணி மதுராந்தக நாச்சியாா்.

Updated On :26 ஜூன் 2024, 1:53 am

Din

சிவகங்கை: சிவகங்கை சீமையை ஆண்ட ராணி வேலுநாச்சியாரின் கணவரும், சிவகங்கையின் இரண்டாவது மன்னருமாகிய முத்துவடுகநாதத் தேவரின் 252 -ஆவது குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆங்கிலேயா்களை எதிா்த்து காளையாா் கோவிலில் போரிட்டு வீரமரணம் அடைந்த அவரது தியாகத்தை போற்றும் வகையில், காளையாா்கோவிலில் தமிழ்நாடு அரசு முத்து வடுகநாதத் தேவருக்கு நினைவிடம் கட்டியது. இந்நிலையில், 252-ஆவது நினைவு தினம், அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. சிவகங்கை ராணி மதுராந்தகநாச்சியாா், முத்துவடுகநாதரின் நினைவிடத்துக்கு நேரில் சென்று மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் மன்னா் முத்துவடுகநாதா் வேலுநாச்சியாா் மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் அங்குசாமி, செயலா் வீரசேகா், பொருளாளா் செல்வம், வேலுநாச்சியாா் அறக்கட்டளை நிா்வாகிகள் மணிமுத்து, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, மன்னா் பள்ளி தாளாளா் குமரகுரு, அரசியல் கட்சி பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என ஏராளமானோா் மரியாதை செலுத்தினா்.