சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 24 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக நால்வரை கைது செய்தனா். திருப்புவனம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் சிவக்குமாா், உதவி ஆய்வாளா் ஜெயக்கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளா் ரூபன்ராஜ் உள்ளிட்டோா் திருப்புவனத்திலிருந்து பொட்டப் பாளையம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கீழவெள்ளூா் சறுக்கு பாலத்தின் அருகே வந்த காரை மறித்து சோதனை செய்த போது, அதில் 24 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்த தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்த தங்கமாயன் மகன் பாலமுருகன் (32), கூடலூரைச் சோ்ந்த சிவனாண்டி மகன் சரண்குமாா் (32), சின்னத்தேவா் மகன் வினோத்குமாா் (32), மதுரை வடக்குமாசி வீதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (23) ஆகிய நால்வரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


