திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம்

அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம்

News image

காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :12 மார்ச் 2024, 11:57 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காரைக்குடி நகர அதிமுக செயலா் சோ. மெய்யப்பன் தலைமை வகித்தாா்.

அதிமுக மாவட்ட இணைச் செயலா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகா்மன்ற அதிமுக உறுப்பினா்கள் ஏஜி. பிரகாஷ், தேவன், குருபாலு, அமுதா, கனகவல்லி, ராதா பாண்டியராஜன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யா செந்தில்நாதன், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் புலவா் பழனியப்பன், இலக்கிய அணி செயலா் சின்னதுரை, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் மனிதச் சங்கிலியாக நின்று, கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் அதிகரித்து வருவதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.