இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

சிவகங்கை தொகுதியில் இதுவரை வேட்பு மனு தாக்கல் இல்லை

சிவகங்கை தொகுதியில் இதுவரை வேட்பு மனு தாக்கல் இல்லை

Updated On :22 மார்ச் 2024, 6:18 pm

சிவகங்கை, மாா்ச் 22: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் தேதி தொடங்கிய மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் ஏப்.19 -இல் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளா்களை அறிவித்தது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் உள்பட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்ட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.