பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு உரையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) மாலை நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது, அந்த மசோதாக்களுக்கு 298 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டுக்கான தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (ஏப். 18) இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மசோதாக்களால் தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனக் கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
முன்னதாக, இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்று இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been announced that Prime Minister Narendra Modi will address the nation tonight.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி ட்வீட்

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


