அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகப் பணியில் சேரும் 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொளி காட்சியின் வாயிலாக, பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை வழங்கினார்.
'ரோஸ்கார் மேளா' என்று அழைக்கப்படும் வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, ரோஸ்கார் மேளா என்னும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட 18 வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஏறக்குறைய 12 லட்சம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள். ஏனென்றால், 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களுடைய பணிநியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர்.
வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியாவுக்கான முன்னெடுப்பில் நீங்கள் அனைவரும் ஒரு முக்கியப் பங்கை ஆற்றப் போகிறீர்கள். இந்த சாதனைக்காக, உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பணிநியமன ஆணைகளைப் பெற்ற இளைஞர்கள், ரயில்வே, உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், நிதி, உயர்கல்வி போன்ற நாட்டின் அனைத்து துறைகளிலும் பணியாற்ற உள்ளனர். மேலும், நாடு முழுவதும் 47 இடங்களில் இந்த 'ரோஸ்கார் மேளா' இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
On Saturday, Prime Minister Narendra Modi distributed appointment orders via video conferencing to more than 51,000 youths newly joining various government departments.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










