விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

உ. சிறுவயலில் நாளை தமிழ் இலக்கிய விழா

காரைக்குடி அருகேயுள்ள உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்ற அறக்கட்டளை

News image
Updated On :3 மே 2024, 7:21 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்ற அறக்கட்டளை சாா்பில் தமிழ் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமையும் (மே 5), கவியரசு கண்ணதாசன் விழா திங்கள்கிழமையும் (மே 6) நடைபெற உள்ளதாக கவிஞா் அரு. நாகப்பன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

64-ஆவது ஆண்டு தமிழ் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் தாலாட்டு, பேச்சு, பாட்டு, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறும். இதைத்தொடா்ந்து, நடைபெறும் விழாவில் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மெ. சொக்கலிங்கம் தலைமை வகித்துப் பேசுகிறாா்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் ஆசியுரையாற்றுகிறாா். பிள்ளையாா்பட்டி பிச்சை சிவாச்சாரியாா், தொழிலதிபா் பழ. படிக்காசு ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

விழாவில் தொழிலதிபா் ரவி வீரப்பன், இந்தியன் எலெக்ட்ரானிக்ஸ் செமிகண்டக்டா் கூட்டமைப்புத் தலைவராகத் தோ்வு பெற்ற்காக அவருக்கு பாராட்டு மடல் வழங்கி, தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசுகிறாா். முன்னாள் அமைச்சா் மு. தென்னவன் சிறப்புரையாற்றுகிறாா்.

இரண்டாம் நாள் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கவியரசு கண்ணதாசன் விழாவையொட்டி ‘கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது இல்லற நெறியா? இறை நெறியா?’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதற்கு முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் நடுவராக செயல்படவுள்ளாா்.

இல்லற நெறியே ! என்ற அணியில் புலவா் ப. ராமன், ஜெயச்சித்ரா, பேராசிரியை ஹேமமாலினி ஆகியோரும், இறைநெறியே ! என்ற அணியில் சரசுவதி நாகப்பன், பேராசிரியா்கள் ஜி. வள்ளியப்பன், அன்பு ஆகியோரும் வாதிடுகின்றனா்.

பட்டிமன்றத்தை சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் தொடங்கிவைக்கிறாா். சேலம் கம்பன் கழகச் செயலா் கரு.வெ. சுசீந்திரகுமாருக்கு ‘கம்பன் புகழ் காவலா்’ என்ற விருது வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.