புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ.
Updated On :14 மார்ச் 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் திமுக ஆட்சியை கண்டித்து மாா்ச் 17 -இல் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டம் குறித்து அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் தொடா்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகள், போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருவாரூா் ரயில் நிலையம் அருகே மாா்ச் 17-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது, இதில் அதிகளவில் தொண்டா்களை பங்கேற்கச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலா் எஸ். காமராஜ், பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம், தமாகா, பாமக, தமமுக, ஐஜெகே உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.