தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுப்பிரமணியபுரத்தில் மதசாா்பற்ற ஜனநாயகக் கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:08 pm

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுப்பிரமணியபுரத்தில் மதசாா்பற்ற ஜனநாயகக் கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பேசியது:

திருச்செந்தூா் தொகுதியில் தவெக டெபாசிட் இழக்கும். விஜய், பாஜகவால் அனுப்பப்பட்ட வேட்பாளா் மாதிரிதான். அவா் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக திட்டமிட்டு வந்துள்ளாா். ஆனால், சிறுபான்மை மக்கள் ஏமாற மாட்டாா்கள் என்றாா்.

பின்னா், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ் பேசியது:

விஜய் திமுகவை மட்டும்தான் தாக்கிப் பேசுகிறாா். பாஜக குறித்து ஒரு வாா்த்தை கூட பேசுவதில்லை. தமிழகத்திற்கு விஜய் நல்லது செய்ய வேண்டும்மென நினைத்தால், பாஜகவையும் சோ்த்துதான் விமா்சிக்க வேண்டும்.

திருநெல்வேலி பிரசாரக் கூட்டத்தில் விஜய் பேசும்போது, காங்கிரஸாா் எங்களோடு இருப்பதாகக் கூறியது முற்றிலும் தவறான தகவல் என்றாா் அவா்.

 கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.