ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தென்காசியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவனை ஆதரித்து சுரண்டை பகுதியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தாா்.

News image

திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:48 pm

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவனை ஆதரித்து சுரண்டை பகுதியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசியது: மருத்துவா் கலை கதிரவன் நன்கு படித்த பண்பாளா். கரோனா காலத்தில் இலவச மருத்துவப் பணி செய்தவா். இவா் வெற்றி பெற்றால் தென்காசி தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வரிடம் நேரடியாக கேட்டுப் பெற்று தென்காசியை வளமான தொகுதியாக மாற்றுவாா் என்றாா் அவா்.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ, முன்னாள் தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், மதிமுக மாவட்டச் செயலா் ராம. உதயசூரியன், சுரண்டை நகர பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், ஒன்றிய திமுக செயலா் ரமேஷ், வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.