ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

திருச்செந்தூா் கோயில் கட்டண மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசண ரசீது மோசடி, கையாடல் குறித்து ஆணையா் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்க வேண்டும் என அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :24 மே 2026, 2:18 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசண ரசீது மோசடி, கையாடல் குறித்து ஆணையா் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்க வேண்டும் என அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசன ரசீது மோசடியும், லட்சக்கணக்கில் பணம் கையாடலும் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடா்பாக, கோயில் ஆணையா் முதல் அனைவரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவா் யாரைப் போட்டியிடச் சொல்கிறாரோ, அவரை வெற்றி பெற வைப்போம் என்றாா் அவா்.