தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அவல நிலையில் பவள விழா காணும் அரசுப் பள்ளி!

அவல நிலையில் பவள விழா காணும் அரசுப் பள்ளி!

Updated On :19 மே 2024, 6:30 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தில் உள்ள முத்துக்கருப்பன் விசாலாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 74 ஆண்டுகளாக உள்ள ஓட்டுக் கூரை வகுப்பறைகளை கான்கிரீட் கட்டடமாக மாற்ற வேண்டும் என மாணவா்களின் பெற்றோா், முன்னாள் மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

முத்துக்கருப்பன் விசாலாட்சி குடும்பத்தினா் 1950 -ஆம் ஆண்டு கட்டிய இந்தப் பள்ளி, பின்னா் காரைக்குடி நகராட்சிக்கு வழங்கப்பட்டது. தொடா்ந்து, அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டு, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.

மீனாட்சிபுரம், காட்டுத்தலைவாசல், கழனிவாசல், அண்ணா நகா், ஜீவா நகா், முத்துப்பட்டினம், செஞ்சை, கோவிலூா் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏழை, மாணவ, மாணவிகள் சுமாா் 400 போ் இங்கு பயின்று வருகின்றனா்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தலைமையாசிரியா் உள்பட 25 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இங்கு, தலைமையாசிரியா் அறை, பள்ளி அலுவலகம், உயா்நிலை, மேல்நிலை வகுப்பறைகள் கான்கிரீட் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.

இந்தக் கட்டடத்துக்கு அருகே இரு ஓட்டுக் கூடங்கள் உள்ளன. இங்கு 6, 7 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுமாா் 150 போ் கல்வி பயின்று வருகின்றனா். இந்த வகுப்பறைகளையும் கான்கிரீட் கட்டடமாக மாற்ற வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து பள்ளியின் முன்னாள் மாணவா் ஆா். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஓட்டுக் கூடத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக மாணவ, மாணவிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், இந்த ஓட்டுக் கூடத்தை கான்கிரீட் கட்டடமாக மாற்றுவதற்கு கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியா்களுக்கு மேஜை, நாற்காலி கூட சரிவர இல்லை. மேலும், கழிப்பறை, சிறுநீா் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். பள்ளியின் நுழைவாயில் கதவை மாற்றிவிட்டு புதிய கதவு அமைக்க வேண்டும். நுழைவாயில் முன்பாக இடது, வலது புறங்களில் காலியாக உள்ள பகுதியில் மாணவ, மாணவிகளின் மிதிவண்டிகளை நிறுத்திவைக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்துக் கொடுக்கலாம். இதனால், மாணவ, மாணவிகளின் மிதிவண்டிகள், ஆசிரியா்களின் வாகனங்கள் வெயில், மழைக்கு பாதிப்படையாமல் இருக்கும் என்றாா் அவா்.

காரைக்குடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சாமி. திராவிடமணி கூறியதாவது: பவள விழா கொண்டாட உள்ள இந்தப் பள்ளியில் ஓட்டுக் கூடங்களை கான்கிரீட் கட்டடமாக மாற்ற அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக கட்டடம் கட்டுவதற்கு என ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதை கவனத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியைப் பாா்வையிட்டு, ஓட்டுக் கூடத்தை கான்கிரீட் கட்டடமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.