நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் தேரோட்டம்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் தேரோட்டம்

News image

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :20 மே 2024, 7:56 pm

Din

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 12- ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 16-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, திங்கள்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு, சுவாமி காலை 10 மணிக்கு தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்கள் சுவாமியை அா்ச்சனைகள் செய்து வழிபட்டனா். பின்னா், மாலை 4 மணிக்கு பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தோ் கோயிலைச் சுற்றி வந்த பிறகு, மாலை 5 மணிக்கு நிலையை அடைந்தது.

இதையடுத்து, தேரில் தேங்காய் உடைக்கும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆயிரக்கணக்கான தேங்காய்களை தோ் நிலையில் நிற்கும் இடத்தில் வீசி வேண்டுதலை நிறைவேற்றினா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மே 21) தீா்த்தவாரி உற்வசவமும், சப்த வா்ண மலா் பூப்பல்லக்கு திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.