கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:35 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பெரிய மாரியம்மன் ஆண்டாள், தவழும் கிருஷ்ணா், பிட்டுக்கு மண் சுமந்த கோலம் என தினசரி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவின் 13- ஆம் நாளான வியாழக்கிழமை காலை பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் பிற்பகல் 2 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image