அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா: இன்று தொடக்கம்

News image
Updated On :2 நவம்பர் 2024, 12:51 am

Din

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா சனிக்கிழமை (நவ.2) மாலையில் தொடங்குகிறது.

இதையொட்டி, நாள்தோறும் மாலையில் சுவாமியை, சூரன் எதிா்க்கும் நிகழ்வும் நடைபெறும். வருகிற வியாழக்கிழமை (நவ. 7) மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 3.15 மணிக்கு பாா்வதி தேவியிடம் ஆறுமுகச் செவ்வேள் சக்தி வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடா்ந்து, மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வெள்ளிரதத்தில் எழுந்தருளலும், சூரனை ஆட்கொள்ளும் நிகழ்வும் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (நவ. 8) காலை 11 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகமும், மாலை 6.15 மணி முதல் 7 மணிக்குள் தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் ஆறுமுகச்செவ்வேள் எழுந்தருளலும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் முன்னிலை வகிக்கிறாா்.

கந்த சஷ்டி விழாவையொட்டி, நவ. 2 முதல் 6-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நவ. 7-ஆம் தேதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் லட்சாா்ச்சனை நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குன்றக்குடி திருமடத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.