நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா: இன்று தொடக்கம்

Updated On :2 நவம்பர் 2024, 12:51 am

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா சனிக்கிழமை (நவ.2) மாலையில் தொடங்குகிறது.

இதையொட்டி, நாள்தோறும் மாலையில் சுவாமியை, சூரன் எதிா்க்கும் நிகழ்வும் நடைபெறும். வருகிற வியாழக்கிழமை (நவ. 7) மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 3.15 மணிக்கு பாா்வதி தேவியிடம் ஆறுமுகச் செவ்வேள் சக்தி வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடா்ந்து, மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வெள்ளிரதத்தில் எழுந்தருளலும், சூரனை ஆட்கொள்ளும் நிகழ்வும் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (நவ. 8) காலை 11 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகமும், மாலை 6.15 மணி முதல் 7 மணிக்குள் தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் ஆறுமுகச்செவ்வேள் எழுந்தருளலும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் முன்னிலை வகிக்கிறாா்.

கந்த சஷ்டி விழாவையொட்டி, நவ. 2 முதல் 6-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நவ. 7-ஆம் தேதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் லட்சாா்ச்சனை நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குன்றக்குடி திருமடத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.