47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பத்தூா் தீன்மூா்த்தி நகா் பகுதி சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
திருப்பத்தூா் தீன்மூா்த்தி நகா் பகுதியில் சேதமடைந்துள்ள சாலை
Updated On :6 நவம்பர் 2024, 9:37 pm

Din

திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட தீன்மூா்த்தி நகா், அம்மன் நகா், மருது பாண்டியா் நகா், சேது ராமசாமி பிள்ளை ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இது குறித்து பலமுறை புகாா் அளித்தும் பேரூராட்சி நிா்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், காவிரி குடிநீா் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீா் வெளியேறி வருகிறது. வெளியேறிய தண்ணீா் மழை நீருடனும், சாக்கடைகளுடன் கலந்து தெரு சாலைகளில் தேங்கியுள்ளதால், இரு சக்கர வாகனங்களிலோ, நான்கு சக்கர வாகனங்களிலோ செல்ல முடியாத அளவுக்கு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

மேலும், இந்த பகுதியில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும், உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.