விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் சில்லறைபுரவு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image
ஆவரந்தாகுளத்து கரையில் பழுதடைந்து காணப்படும் சாலை.
Updated On :11 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் சில்லறைபுரவு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பதாவது: பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குள்பட்ட, சிவநாடானூா் ஊராட்சி, ராமச்சந்திரபட்டினம் - மடத்தூா் வழியாக முத்துமாலைபுரத்திற்கு செல்லும் ஆவரந்தாகுளத்து கரையில், சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இந்தச் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். எனவே, கள ஆய்வு செய்து பழுதடைந்த ஆவரந்தாகுளத்து கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.