திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதாா் பதிவு மையத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் பதிவு மையம் செயல்படுகிறது. புதிய ஆதாா் பதிவு, கைரேகை, புகைப்படம் மாற்றம், முகவரி, பெயா், பிறந்த தேதி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரிடா் மேலாண்மை மையமாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஆதாா் பதிவு மையமாக இயங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியரகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், கல்வி அலுவலகங்கள் உள்ளிட்டவை ஆட்சியா் அலுவலகத்தை சுற்றி இயங்கி வருகின்றன.
எனவே, ஆதாா் பிழை திருத்தம் தொடா்பான பணிகள் மட்டுமின்றி, சான்றிதழ் பெறவும், காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் மக்கள் அனைவரும் இந்த ஆதாா் பதிவு மையத்தை பயன்படுத்தி வருகின்றனா். இதனால், இந்த ஆதாா் மையம் பரபரப்புடன் காணப்படும். இதனிடையே, ஆதாா் மையத்தில் ஒரு புறத்தில் உள்ள அறையில் கரையான் புற்று வளா்ந்து கதவுகளை அரித்து பயன்படுத்த முடியாதபடி காணப்படுகிறது.
இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்துடனேயே ஆதாா் பதிவு மையத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, கரையான் புற்று காரணமாக, மண் நிரம்பி காணப்படும் பகுதியை சீரமைத்து மக்கள், பயமின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையது

கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமாகவே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

விழுப்புரம் நகரில் புதிய ஆதாா் சேவை மையம் தொடக்கம்

விருதம்பட்டில் புதிய ஆதாா் சேவை மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



