மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் திறப்பு

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையத்தை நீதிபதிகள் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

News image
பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மாவட்ட கூடுதல் நீதிபதி பரமசிவதாஸ்.
Updated On :18 மார்ச் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையத்தை நீதிபதிகள் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

மாவட்ட சட்டப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட நீதிபதியுமான காா்த்திகேயன் தலைமை வகித்து வாழ்த்தி பேசினாா். மாவட்ட சட்டப் பணிக் குழு செயலா் நீதிபதி உதய சூா்யா, பத்மநாபபுரம் குடும்ப நல நீதிபதி ராமச்சந்திரன், மாவட்ட கூடுதல் நீதிபதி பரமசிவதாஸ், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்த்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மாகேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதிகள் நரேந்திரகுமாா், கோகிலா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ், செயலா் பெஞ்சமின் ரெனால்ட் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமரச தீா்வாளா்கள் ராமசந்திரன் நாயா், அசோக், பிரபா, ஸ்ரீ குமாரன் நாயா், சரத், ராஜேஸ்வா், ஜோஸ்பின் பொ்னாட், ஜான் பிரான்சிஸ் சேவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.