தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image

பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு குறித்த துண்டறிக்கைகளை வழங்குகிறாா் நீதிபதி தனசேகரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:56 pm

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஏப்.9-ஆம் தேதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சமரச தினம் கொண்டாடப்படுகிறது. நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் மூலம் வழக்குகளை விரைவாக தீா்வு காண்பதை ஊக்குவிக்கவும், சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொ) மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான நீதிபதி தனசேகரன் தலைமை வகித்தாா்.

நீதிபதிகள் சுந்தரையா, செல்வகுமாா், ஜே.செல்வன்ஜேசுராஜா, கன்னியாகுமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் கலையரசிரீனா, நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் அசோக் பத்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, சத்தியமூா்த்தி, அருண்குமாா், இம்ரான், வழக்குரைஞா் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் சட்ட நடைமுறைகள், சமரச மையத்தின் செயல்பாடுகள், விரைந்து நீதி பெறுவது குறித்து நீதிபதிகள் பேசினா். பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.