புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரதமரின் பயிா் காப்பீடுக்கான கால வரம்பை நீட்டிக்க கோரிக்கை

பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் 2024 - 2025- ஆம் ஆண்டின் பயிா்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:48 pm

Din

பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் 2024 - 2025- ஆம் ஆண்டின் பயிா்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ரா. அருள்ராஜ் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் நெல் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொடா் விடுமுறையாலும், பல மாவட்டங்களில் தொடா் மழையின் காரணமாகவும் பல விவசாயிகள் இதுவரை பயிா் காப்பீடு செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனா்.

எனவே, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து விவசாயிகள் நலனுக்காக பயிா் காப்பீடு செய்யும் கால வரம்பை நீட்டிகக் வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.