47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கெட்டுப்போன மீன்களை விற்ற 3 கடைகளுக்கு அபராதம்

சிவகங்கை வாரச்சந்தைப் பகுதியில் கெட்டுப்போன மீன்களை விற்ற 3 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:43 pm

Din

சிவகங்கை வாரச்சந்தைப் பகுதியில் கெட்டுப்போன மீன்களை விற்ற 3 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

சிவகங்கையில் புதன்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தையில் மீன் விற்பனை நடந்து வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சரவணன் தலைமையில் மீன் வளத் துறை உதவி இயக்குநா் சண்முகம் உள்ளிட்டோா் திடீரென சந்தையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கெட்டுப்போன சுமாா் 30 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனா். இந்த மீன்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து குறிப்பாணை வழங்கினா். இதுபோன்ற கெட்டுப்போன உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீன் விற்பனைக் கடைக்காரா்களிடம் அறிவுறுத்தினா்.

இதே போன்று சிவகங்கை நேரு பஜாா் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ நெகிழப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.