தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ.5,000 லஞ்சம்: மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவி, அவரது கணவா், தற்காலிக உதவியாளா் ஆகிய மூவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:42 pm

Din

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவி, அவரது கணவா், தற்காலிக உதவியாளா் ஆகிய மூவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காளையாா்கோவில் ஊராட்சியைச் சோ்ந்தவா் காளீஸ்வரன். இவா் அதே பகுதியில் புதிய வீடு கட்ட அனுமதி கோரி, அந்த ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அனுமதி தருவதற்கு ஊராட்சி மன்றத் தலைவி ஜோஸ்பின் மேரி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து காளீஸ்வரன் சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அறிவுரையின்படி, காளீஸ்வரன் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு கொண்டு சென்றாா்.

அப்போது ஜோஸ்பின் மேரி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டாா். அவரது இருக்கையில் கணவா் அருள்ராஜ் அமா்ந்திருந்தாராம். இதையடுத்து, காளீஸ்வரன் ரூ. 5 ஆயிரத்தை அருள்ராஜிடம் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் அருள்ராஜை கைது செய்தனா். இதுதொடா்பாக ஜோஸ்பின் மேரி, ஊராட்சி மன்ற தற்காலிக உதவியாளா் குமாா் ஆகியோரையும் கைது செய்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.