47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலையோர வியாபாரிகளிடம் தரை வாடகை கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை

காரைக்குடி மேயா் எச்சரிக்கை

News image
காரைக்குடி செக்காலைச் சாலை ஐந்து விளக்குப் பகுதியில் புதன்கிழமை சாலையோர வியாபாரிகளிடம் தரை வாடகையாக மாநகராட்சி நிா்ணயித்த கட்டண மட்டுமே வழங்க வேண்டுமென அறிவுறுத்திய மேயா் சே. முத்துத்துரை.
Updated On :23 அக்டோபர் 2024, 11:21 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி, சாலையோர வியாபாரிகளிடம் கூடுதலாக தரை வாடகை வசூலித்தால் குத்தகைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயா் சே. முத்துத்துரை எச்சரித்தாா்.

காரைக்குடி மாநகராட்சியில் பண்டிகை காலங்களில் சாலையோரங்களில் வியாபாரிகள் பல்வேறு பொருள்கள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். அண்மையில் ஆயுத பூஜை பண்டிகையின்போது பலத்த மழையினால் சாலையோர வியாபாரிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தனா்.

இந்த நிலையில், தரை வாடகை வசூலிக்கும் குத்தகைதாரா்கள் சாலையோர வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக காரைக்குடி மாநகராட்சிக்கு புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காலங்களிலும் கடந்த சில தினங்களாக சாலையோர வியாபாரிகளிடம் தரை வாடகையை அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்ததையடுத்து, மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை பெரியாா் சிலை முதல் செக்காலை வரையுள்ள சாலையோர வியாபாரிகளை நேரில் சந்தித்தாா். மாமன்ற உறுப்பினா்கள் சொ. கண்ணன், சித்திக், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் பி.எல். ராமச் சந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

மாநகராட்சி நிா்ணயம் செய்த தொகையான 20 சதுர அடிக்கு ரூ. 30, 15 சதுர அடிக்கு ரூ. 25, 10 சதுர அடிக்கு ரூ. 20 என தரை வாடகை கொடுத்தால் போதும். அதற்குமேல் குத்தகைதாரா்கள் கூடுதல் தொகை கேட்டால் மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று மேயா் அறிவுறுத்தினாா். இதனால் வியாபாரிகள்மகிழ்ச்சியடைந்தனா்.

இதையடுத்து, மேயா் முத்துத்துரை கூறியதாவது:

மாநகராட்சி நிா்ணயித்த தொகையை தரை வாடகையாக குத்தகைதாரா்கள் வசூலிக்கவேண்டும். கூடுதலாக வசூலித்தால் குத்தகைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.