காரைக்குடி கடைவீதிகளில் அலைமோதிய பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, பொருள்கள் வாங்க புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, பொருள்கள் வாங்க புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
காரைக்குடி புதிய பேருந்துநிலையம், நூறடிச்சாலை, செக்காலைச் சாலை, ஐந்துவிளக்கு, கல்லுக்கட்டி, கோவிலூா் சாலை, வ.உ.சி சாலை என பல்வேறு பகுதிகளிலும் சாலையோரத்தில் பல் பொருள்களை வைத்து சிறு வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டனா். மேலும் பெரிய கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடந்த சில தினங்களாக பகலில் சில நேரங்களிலும், மாலை நேரங்களிலும் மழை பெய்ததால் மக்கள் நடமாட்டம் கடைவீதிகளில் குறைவாகக் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. ஆங்காங்கே போலீஸாா் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...