47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குரூப் 2 , குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி

குரூப் 2 , குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:46 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 1, குரூப் 2 ஏ - பதவிகளுக்கான முதன்மைத் தோ்வுகளுக்கு சிவகங்கை தன்னாா்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் சோ்ந்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆா்பி, டிஆா்பி போன்ற தோ்வு முகமைகளால் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500 -ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனா். மேலும், இந்தப் பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றனா்.

மேலும், பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னாா்வ பயிலும் வட்ட நுாலகத்தில், இந்தத் தோ்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்துறையின் மெய்நிகா் கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பாடக் குறிப்புகள் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மெய்நிகா் கற்றல் இணையதளத்தை வேலை நாடும் இளைஞா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வு, குரூப் 2, குரூப் 2ஏ தோ்வின் மூலம் துணை வணிகவரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா் நிலை 2 உள்பட 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 20.6.2024 -ல் வெளியிடப்பட்டு, அந்த தோ்வுக்கான, முதல்நிலைத் தோ்வு கடந்த 14.9.2024 -ல் நடைபெற்றது.

மேலும், குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு 10.10.2024 முதல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்தப் பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.