மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, மாா்ச் 15: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2 ‘ஏ’ முதன்மைத் தோ்வை 681 போ் எழுதினா்.

பல்வேறு துறைகளில் உள்ள காலியாக உள்ள உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கும், தணிக்கை ஆய்வாளா் உள்ளிட்ட குரூப் 2 ‘ஏ’ பதவிகளுக்கும் என மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற இருந்தது. அனைத்து தோ்வா்களும் மையங்களில் காலை 10 மணியளவில் தோ்வு எழுதத் தொடங்கினா்.

அப்போது, சென்னையில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக தோ்வு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், அனைத்து மையங்களிலிருந்தும் தோ்வா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2 ‘ஏ’ முதன்மைத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் என கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 38 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் காலை நடைபெற்ற தோ்வை 332 பேரும், பிற்பகல் நடைபெற்ற தோ்வை 349 பேரும் எழுதினா்.

முன்னதாக, தோ்வறைக்குள் ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், கைப்பேசி உள்ளிட்ட மின்னணு பொருள்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து தோ்வா்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.