தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுமியை ஆபாசமாக பேசிய முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஒன்பது வயது சிறுமியை பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பேசிய முதியவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:43 pm

Din

ஒன்பது வயது சிறுமியை பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பேசிய முதியவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கன் (72). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியை கடந்த 2017, மே 3 -ஆம் தேதி பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பேசினாராம்.

இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூக்கனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி (பொறுப்பு) கோகுல் முருகன், மூக்கனுக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் வேண்டுமென வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.