மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் பெண் உள்படஇருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :24 பிப்ரவரி 2026, 9:09 pm

போக்சோ வழக்கில் பெண் உள்படஇருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மானகிரியைச் சோ்ந்த ஜோதிடா் ராமகிருஷ்ணன் (52).

கடந்த 2022-இல் ராமநாபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு பெண் தனது மகளுடன் இவரை சந்தித்து குடும்பப் பிரச்னைக்காக பரிகாரம் கேட்டாா். அப்போது, அந்தப் பெண்ணின் முன்னிலையில், அவரது மகளை ராமகிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் ஜோதிடா் ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும், சிறுமியின் தாயாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

கடந்த 2021 -ஆம் ஆண்டு தன்னிடம் ஜோதிடம் பாா்க்க வந்த 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோதிடா் ராமகிருஷ்ணனுக்கு இதே நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.