தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை அரசு பெண்கள் பள்ளியை மாற்று இடத்தில் அமைக்க நிலம் தோ்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாற்று இடத்தில் அமைக்க நிலம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

News image
மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.
Updated On :5 செப்டம்பர் 2024, 7:10 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாற்று இடத்தில் அமைக்க நிலம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பேசியதாவது;

இந்தப் பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். குறுகிய இடத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள், தேவையான வசதிகள் இல்லாததால் மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். இதுகுறித்து தமிழக கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் இந்தப் பள்ளியை மாற்று இடத்தில் அமைக்க இடம் தோ்வு செய்யுமாறும், உடனடியாக கட்டடப் பணிகளை தொடங்க நிதி ஒதுக்கீடு செய்து தருவதாகவும் உறுதியளித்தாா்.

Story image

எனவே, பள்ளியை மாற்று இடத்தில் அமைக்க நகா் பகுதிக்கு அருகிலேயே 4 ஏக்கா் நிலம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்அவா்.

தலைமை ஆசிரியா் பேப்லிட், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் க.பொன்னுச்சாமி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் ஜி.மயில்வாகனன், ஆசிரியா்கள் இதில் கலந்து கொண்டனா்.