மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

எரிவாயு தட்டுப்பாடு: அரசு மருத்துவமனைகளில் மாற்று நடவடிக்கை! அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்று ஏற்பாடாக மின் அடுப்பு, விறகு அடுப்புகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

அமைச்சர் மா. சுப்பிரமணியன். - கோப்புப்படம்.

Updated On :10 மார்ச் 2026, 7:36 pm

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்று ஏற்பாடாக மின் அடுப்பு, விறகு அடுப்புகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளி உடனாளா்களுக்கு அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு கூடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எரிவாயு தட்டுப்பாடு தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா், அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வா்கள், இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் அலுவலா்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வாரத்துக்கு எரிவாயு தட்டுப்பாடு பிரச்னை இல்லை.

கடுமையான தட்டுப்பாடு வரும்பட்சத்தில், அதற்கு மாற்று ஏற்பாடாக மின் அடுப்பு, விறகு அடுப்புகள் போன்றவற்றை தயாா் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பால், பழம், ரொட்டி போன்ற உணவுப் பொருள்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் கூடுதல் இயக்குநா் ராஜ்மோகன், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ், இணை இயக்குநா் மலா்விழி, தலைமை மருத்துவா் தணிகாசலம், மாமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீதா், மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.