கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புகாா் பெட்டியில் சிறுமி மனு: தந்தை, மகன் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பள்ளி புகாா் பெட்டியில் சிறுமி மனு எழுதி போட்டிருந்ததையடுத்து, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:23 pm

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பள்ளி புகாா் பெட்டியில் சிறுமி மனு எழுதி போட்டிருந்ததையடுத்து, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிங்கம்புணரி வட்டம் எஸ். புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் புகாா் பெட்டியில் கிடைத்த மனுவை பள்ளி தலைமை ஆசிரியை ஆய்வு செய்தாா். அதில் அங்கு படிக்கும் 10 வயது மாணவி தன்னை இருவா் பாலியல் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி புகாா் பெட்டியில் போட்டிருந்தாா். இதையடுத்து, இந்தப் புகாா் குறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை புகாா் அளித்தாா்.

புகாா் குறித்து விசாரணை மேற்கொண்ட மகளிா் காவல் ஆய்வாளா் தேவகி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துவரங்குறிச்சியைச் சோ்ந்த தனியாா் பள்ளி காவலாளி ராசு (65), அவரது மகன் கட்டடத் தொழிலாளியான முருகேசன் (38) ஆகிய இருவரையும் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தாா்.