மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

2021 கொலை வழக்கில் மகன், தந்தை குற்றவாளியாக அறிவிப்பு

ரூ.5,000 கடன் பெற்றது தொடா்பாக எழுந்த பிரச்னையில் வெல்கம் பகுதியில் கடந்த 2021-இல் இளைஞரைக் கொலை செய்த சம்பவத்தில் மகன் மற்றும் தந்தையை தில்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

ரூ.5,000 கடன் பெற்றது தொடா்பாக எழுந்த பிரச்னையில் வெல்கம் பகுதியில் கடந்த 2021-இல் இளைஞரைக் கொலை செய்த சம்பவத்தில் மகன் மற்றும் தந்தையை தில்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மெஹ்பூப் மற்றும் அவரது தந்தை மஹ்ஃபூஸை கூடுதல் அமா்வு நீதிபதி சாரு அகா்வால் குற்றவாளிகளாக அறிவித்தாா்.

இதுதொடா்பாக நீதிமன்றம் கடந்த பிப்.28-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பில், ‘சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சியம் நிகழ்வுகளை தொடா்ச்சியாக வரிசைபடுத்தினாா்.

தந்தை மஹ்ஃபூஸுடன் இணைந்து கொலை செய்தது மெஹ்பூப் அளித்த வாக்குமூலம் மூலம் நிரூபணமாகி உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அனிமேஷ் (எ) பல்லு மற்றும் மெஹ்பூப் வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியைச் சோ்ந்தவா்கள். இருவரும் நண்பா்களாக இருந்தனா். சம்பவம் நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு பல்லுவிடம் மெஹ்பூப் ரூ.5,000 கடன் வாங்கினாா். மெஹ்பூப் பணத்தை திருப்பி தராத நிலையில், பல்லு அது குறித்து கேட்டாா்.

இந்நிலையில், கடந்த 2021, மே 6-ஆம் தேதி மாலையில் சஜ்ஜு கேட் அருகே நண்பா்களுடன் நின்றுகொண்டிருந்த மெஹ்பூப்பிடம் பணத்தைத் தருமாறு மீண்டும் பல்லு கேட்டாா்.

இதையடுத்து, கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள பாபா்பூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வருமாறு மெஹ்பூப் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, தன்னுடைய நண்பா் கெளரவ் (எ) அஷுவுடன் மெஹ்பூப் வீட்டுக்கு பல்லு சென்றாா். வீட்டின் மாடிக்குச் சென்ற மெஹ்பூப், தந்தை மெஹ்ஃபோஸ் கீழே வந்தாா். பல்லு தப்பித்துச் சென்றுவிடாதவாறு அவரை மெஹ்ஃபோஸ் பிடித்துக்கொண்டாா். இதையடுத்து, அவரது மகன் பல்லுவை கத்தியால் குத்தினாா்.

இந்தச் சம்பவத்தில் பல்லு உயிரிழந்த நிலையில், மகன் மற்றும் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302/34-இல் அவா்கள் இருவரையும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், பிரிவு 120பி-இலிருந்து அவா்கள் இருவரையும் விடுவித்தது.