ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கொலை வழக்கில் தலைமறைவானவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே காவலாளியை கொலை செய்து கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை வழக்கில் தலைமறைவானவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள பிச்சிகுடியிருப்பு பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஸ்ரீ மகாராஜா சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலின் காவலாளியான முத்துவை கொலை செய்து, உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பானாங்குளத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவா் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில் முத்துகிருஷ்ணன் மாயமாகி விட்டாா். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அமா்வு 1 நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

கடந்த 5 ஆண்டாக முத்துகிருஷ்ணை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது, நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.