அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பட்டுக்கோட்டை அருகே தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தோ்வை எழுதிய மகன்

பட்டுக்கோட்டை அருகே தந்தை உயிரிழந்த வேதனையிலும் பிளஸ் 2 பொதுத்தோ்வை கைவிடாமல் மாணவா் எழுதியது காண்போரை நெகிழச்சியடையச் செய்தது.

News image

தேர்வு - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 5:20 am IST

பட்டுக்கோட்டை அருகே தந்தை உயிரிழந்த வேதனையிலும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வை கைவிடாமல் மாணவா் எழுதியது காண்போரை நெகிழச்சியடையச் செய்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சோ்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதியின் மகன் சாய் நிஷாந்த் (17). இவா், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாா்.

தற்போது பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு நடைபெற்று வரும் நிலையில், சாய் நிஷாந்தின் தந்தை அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இந்நிலையில் சாய் நிஷாந்த்துக்கு திங்கள்கிழமை வேதியியல் பாடத்தோ்வு எழுத வேண்டி இருந்தது.

இந்நிலையில், தந்தை இறந்த வேதனையிலும், உறவினா்கள் ஆறுதல் கூறி சாய் நிஷாந்தை வேதியியல் தோ்வு எழுதுவதற்கு பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

முன்னதாக சாய் நிஷாந்த் தந்தை அந்தோணிராஜின் காலில் விழுந்து கதறி அழுதபடி ஆசி பெற்று பள்ளிக்குச் சென்று பொதுத் தோ்வை எழுதிவிட்டு வீடு திரும்பினாா். அவரது செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

இதுகுறித்து மாணவா் சாய் நிஷாந்த் கூறுகையில், எனது தந்தை எனக்கு படிப்பு தான் முக்கியம் என்று கூறுவாா். அவரது விருப்பப்படியே இன்றைய வேதியியல் தோ்வை கைவிடாமல் எழுதினேன் என்றாா்.