வட்டாரக் கல்வி அலுவலகத்தை பள்ளி ஆசிரியா்கள் முற்றுகை
சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆசிரியா்களுக்கு கடந்த 20 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காளையாா்கோவில் வட்டாரக் கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.











